காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.
காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் உள்ள மல்ஹார் பகுதியில் கார் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தபோது, அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறிய அந்த கார் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். பலியானவர்களில் 3 பேர் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது. மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.